பெரியார் போராட்டங்கள் கட்சியைக் காக்கவா?

தம்மோடு இருந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கென பெரியார் பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது  அயோக்கிய குணாவின் அடுத்த குற்றச்சாட்டு இதுஅதாவது பெரியார் செய்த சாதனைகள்அவரின் தனித் தன்மைகள்அவரது சிறப்புகள்அவரது நாணயமானநேர்மையானநம்பகமான போக்கு என எல்லாவற்றையும் எப்படியாவது கேவலப்படுத்திஅவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த மனிதர் எழுதுகோலை எடுத்துள்ளார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
மேற்கண்ட குற்றச்சாட்டை போல ஓர் அற்பத்தனமான குற்றச்சாட்டை யாரும் காட்ட முடியாதுஅந்த அளவிற்கு உண்மை கலவாதமோசடியான முழுப் பொய்யான குற்றச்சாட்டு இது.
நான் ஒருவனே எழுதி  நான் ஒருவனே அச்சுப் போட்டு நான் ஒருவனே படிப்பவனாக இருந்தாலும்குடிஅரசு பத்திரிகையை நடத்துவேன் என்று உறுதி கொண்டு களம் கண்ட ஓர் ஒப்பற்ற மாமனிதரைப் பார்த்துதான் இந்த மண்டூகங்கள் குறை சொல்லுகின்றனதன் பின்னால் எத்தனை பேர் வருவார்கள்எத்தனை பேர் நிலைத்து நிற்பார்கள்எத்தனை பேர் நம்பகத் தன்மையுடையவர்கள் என்று சிந்தித்துஎதிர்பார்த்து இயக்கம் நடத்தியவர் அல்ல பெரியார்அவர் இயக்கம் ஆதாயம் தரும் இயக்கமும் அல்லஎனவேபயன் கருதி எவரும் அந்த அமைப்பில் நிலைக்க முடியாதுஆதாயம் கிடைக்காத ஓர் அமைப்பில் தொண்டர்கள் நிலைத்திருப்பதே கடினம்அப்படியிருக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டுஅதுவும் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டு எவர் தொடர்ந்து இருப்பர்எனவேதொண்டர்களைத் தக்க வைக்க பெரியார் போராட்டம் நடத்தினார் என்பது முட்டாள்தனமான வாதம் அல்லவா?
ஏச்சும்பேச்சும்வெறுப்பும்எதிர்ப்பும் மட்டுமே பரிசாய் கிடைக்கும் ஒரு பணியைத் தெரிந்தே தேர்வு செய்து மேற்கண்ட இணையற்ற ஏந்தல் பெரியார்.
இதைப் பெரியாரே சொல்கிறார்
நாமும் இதுவரை என்ன செய்துவிட்டோமென்று கவலைப் படவில்லைஏனெனில்நம் இலட்சியம் பெரியதுஇதற்காக நாம் செய்யும் முயற்சி மிகச் சிறியதுஇதனுடைய நஷ்டம் நமக்குப் பெரிதல்ல...
மலை போன்ற காரியத்தைக் கொண்டு வருவதற்காகதலைமுடியைப் போன்ற அற்ப சங்கதியைக் கொண்டு கட்டியிழுக்கப் பார்க்கிறோம்வந்தால் மலை போன்ற கொள்கைகள் வரட்டும்அறுந்து போனால் முடி போன்ற நமது அற்ப முயற்சிகள் வீணாய்ப் போகட்டும்.
 - (தரங்கம்பாடியில் 25.5.1931இல் பெரியார் பேசியதுமேலும்இந்த இயக்கத்தை ஆரம்பிக்கும்போதுகூட நாம் என்னையே எண்ணி இப்பெரும் பணி ஏற்றேன் என்று ஒரு பாட்டில் சொல்லப்படுதல் போலநம்மையே நாம் பொறுப்பாளியாகவும்உதவியாளனாகவும்எண்ணியும் நம்பியுமேதான் இக்காரியத்தில் இறங்கினோமே ஒழியநமக்குத் தொண்டர்கள் உண்டுதலைவர்கள் உண்டுநண்பர்கள் உண்டுபணஉதவி செய்கிறவர்கள் உண்டு என்று நினைத்துஅவர்கள் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை வைத்து இவ்வியக்கத்தில் நாம் இறங்கவில்லைஆதலால்நம் கொள்கைகளை உத்தேசித்து வருகின்றவர்களை வர வேண்டியதும்போகிறவர்களைப் போகச் சொல்ல வேண்டியதும் ஒழுக்கமற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களைத் தள்ளப்பட வேண்டியதும் இவ்வியக்கத்தின் கடமையாகி விட்டது.இவ்வியக்கத்தில் நமக்கு உள்ள உறுதிதான் இவ்வியக்கத் திற்குச் சொத்தும்அஸ்திவாரமுமே ஒழிய வேறொன்றும் இல்லை.
- (குடிஅரசு  16.2.1930)
இப்படிக் கூறி இயக்கம் நடத்திய தலைவரைப் பார்த்து இன்றைக்கு முளைத்த காளான்களும் களைகளும் கூறுகின்றபெரியார் தொண்டர்களைத் தக்க வைக்க போராட்டம் நடத்தினார் என்று.
இந்த ஒரு குற்றச்சாட்டை ஆராய்ந்தாலே குணா கும்பலின் சாயம் வெளுத்துவிடும்.
1957இல்ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தினார்இது தேசிய அவமதிப்புக் குற்றம் என்ற வகையில் கொடுந் தண்டனைக்கு உரிய குற்றமாக அரசால் கருதப்பட்டதுஇதை நன்கு அறிந்தும், 10,000 தொண்டர்கள் அரசியல் சட்டநகலை எரித்தனர். 2 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றனர்சிறையில் அடைக்கப்பட்டவர்களில் இருவர் உயிர் இழந்தனர்நீண்ட நாள் சிறை என்பதால் பல குடும்பங்கள் வாழ்விழந்தனசிறையில் ஆயிரக்கணக்கானோர் இன்னலுற்றனர்தொண்டர்களைத் தக்க வைக்க இப்படிப்பட்ட போராட்டமா நடத்துவார்கள்?
பொய்யைச் சொன்னாலும்மோசடியாய் அவதூறு கூறினாலும் அதற்கு ஓர் அளவு வேண்டாம்ஆரியத்திடம் ஆதாயம் பெற்ற அளவிற்கு அவதூறுகளையும் அள்ளி வீசியுள்ளார் இந்த அற்ப மனிதர் என்றே எண்ண வேண்டியுள்ளது.

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா - part- 3